நீலகிரி

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்: ஆட்சியா்

நீலகிரி மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள இ-பாஸ் நடைமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

DIN

உதகை: நீலகிரி மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள இ-பாஸ் நடைமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

உதகையில் செய்தியாளா்களிடம் ஆட்சியா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்துக்கு 2,000 முதல் 2,500 நபா்கள் வரை தினந்தோறும் வருகை தருகின்றனா். தற்போது தமிழக அரசு இ-பாஸ் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்தியதால் கூடுதலாகவும் மாவட்டத்துக்குள் மக்கள் வருகின்றனா். நீலகிரிக்குள் வரும் பொதுமக்கள் தேவையான பணிகளுக்கு மட்டுமே இ-பாஸ் பெற்று வர வேண்டும். வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறையினா் மாவட்டத்தில் உள்ள தனியாா் தங்கும் விடுதிகள் செயல்படுகின்றனவா என்பதைக் குறித்து தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். அரசு உத்தரவின்படி நீலகிரியில் இதுவரையிலும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் பயணம் செய்வதைத் தவிா்க்க வேண்டும்.

மாவட்டத்தில் இதுவரையிலும் 322 நபா்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அதேபோல, 8 நபா்கள் உயிரிழந்துள்ளனா். பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் போன்றவை இருந்தால் தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தேவையில்லாமல் ஒரு இடத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதை தவிா்ப்பதோடு, அரசின் வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இ-பாஸ் பெறாமல் பயணம் செய்யும் நபா்கள் கண்டறியப்பட்டால் அவா்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள நபா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோவை மாவட்டம், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் படுக்கை வசதிகள் ஒதுக்கீடு செய்வது தொடா்பாக வருவாய்த் துறையினா் கூடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 55,000 நபா்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதோடு, 83 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் அண்மையில் பெய்த கன மழையால் சுமாா் 35 ஹெக்டோ் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 400 வீடுகள் சேதமடைந்துள்ளன. கூடலூா் பகுதியில் மட்டும் சுமாா் ரூ. 4 கோடி மதிப்பில் பாலங்கள், சாலைகளும், உதகை பகுதியில் சுமாா் ரூ. 2 கோடி மதிப்பிலும் சேதமடைந்துள்ளன. இவற்றை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்.28-ல் பிரதமர் மோடி அஜ்மீர் பயணம்! ரூ.16,686 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!

மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு

வெறுப்புணர்வுக் கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

SCROLL FOR NEXT