FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முழுக் கொள்ளளவை எட்டும் கபினி அணை! தமிழகத்துக்கு 25,000 கன அடி நீர் திறப்பு!

தமிழகத்துக்கு 25,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 8:38 am IST
கபினி அணை - கோப்புப்படம்
பகிர்:

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 25,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கபினி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், தமிழகத்துக்கு 25,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி இவ்விரு அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் 13,768 கனஅடி தண்ணீர் சனிக்கிழமை இரவு முதல் வெளியேற்றப்பட்டது.

Advertisement

Advertisement

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை செவ்வாய்க்கிழமைக்குள் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேஆர்எஸ் அணையின் மொத்த நீர்மட்டம் 124.80 அடியாகும். சனிக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 95.57 அடியாக இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவு 49.452 டிஎம்சி. இதில் 19.535 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

கபினி அணையின் மொத்த கொள்ளளவு 19.52 டிஎம்சி. இதில் 17.89 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

summary

As dams in Karnataka are filling up rapidly due to heavy rainfall in the Cauvery catchment areas, the volume of water released to Tamil Nadu has been increased to 25,000 cubic feet per second.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments