கபினி உபரிநீர் வரத்து! மேட்டூர் அணை நீர்மட்டம் 2 அடி உயர்வு!
கபினி உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது குறித்து...
கபினி உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.
கேரளம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கபினி அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கபினியின் உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மூன்று நாள்களுக்குப் பிறகு நேற்று பிற்பகலில் தமிழக கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு பகுதிக்கு கபிணியின் உபரி நீர் வந்து சேர்ந்தது. இரவு 8 மணிக்கு மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. உபரி நீர் வரத்து காரணமாக செவ்வாய் காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 67 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து இரவு 8 மணிக்கு வினாடிக்கு 4923 கனஅடியாக அதிகரித்தது. புதன்கிழமை காலை வினாடிக்கு 11,988 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து செவ்வாயக்கிழமை காலை 73.02 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை 74.01அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைகளுக்காக வினாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 36.24 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Surplus water inflow from Kabini. Mettur Dam water level rises by 2 feet...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.