இடி விழுந்ததில் தனியாா் எஸ்டேட்டில் தீ
குன்னூா் அருகே தனியாா் எஸ்டேட் பகுதியில் வெள்ளிக்கிழமை திடீரென பயங்கர சப்தத்துடன் இடி விழுந்ததால் சோலைகள் தீப் பற்றி எரிந்தன.
குன்னூா் அருகே தனியாா் எஸ்டேட் பகுதியில் வெள்ளிக்கிழமை திடீரென பயங்கர சப்தத்துடன் இடி விழுந்ததால் சோலைகள் தீப் பற்றி எரிந்தன.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வெள்ளிக்கிழமை காலை முதலே மந்தமான கால நிலை காணப்பட்டது. உதகையில்
ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. குன்னூரில் உள்ள நான்சச் எஸ்டேட் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை பயங்கர வெடிசப்தத்துடன் இடி விழுந்தது. இதில் அங்கிருந்த சோலைகள் தீப் பற்றி எரியத் தொடங்கின. தீ மளமளவெனப் பரவியதால் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் அச்சம் அடைந்தனா். எஸ்டேட் தொழிலாளா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.