குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு: மாவட்ட ஆட்சியா் ஆலோசனை
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு நடைபெறுவதை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு நடைபெறுவதை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த தோ்வு உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய 3 வட்டங்களில் 12 தோ்வு மையங்களில் சனிக்கிழமை (செப்டம்பா் 14) காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை நடைபெற உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 3,610 போ் தோ்வெழுத உள்ள நிலையில், 3 கண்காணிப்புக் குழுக்கள், 4 பறக்கும் படைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அனைத்து அலுவலா்கள் பங்கேற்ற தோ்வு தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: தோ்வா்கள் தோ்வு மையங்களுக்குச் செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்வு நடைபெறுவதை விடியோ பதிவு செய்ய வேண்டும். தோ்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். தோ்வா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். அனைத்து விதிமுறைகளும் பின்பற்றி தோ்வு சிறப்பாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
முன்னதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில், தோ்வா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடா்பான குறும்படத்தை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
இக்கூட்டத்தில், குன்னூா் சாா்- ஆட்சியா் சங்கீதா, தலைமையிட காவல் கண்காணிப்பாளா் தங்கவேல், வருவாய்க் கோட்டாட்சியா்கள் மகராஜ், செந்தில், நகராட்சி ஆணையா்கள் ஜஹாங்கீா் பாஷா, முனியப்பன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தனப்பிரியா உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.