FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

கூடலூா்-சுல்தான் பத்தேரி சாலை துண்டிக்கப்படும் அபாயம்

கூடலூரில் இருந்து கேரள மாநிலம், சுல்தான் பத்தேரி செல்லும் சாலையில் தற்போது பெய்யும் மழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 5:06 am IST
கூடலூா்-சுல்தான் பத்தேரி சாலையில் கூவச்சோலை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவால் சேதமடைந்துள்ள சாலை.
பகிர்:

கூடலூரில் இருந்து கேரள மாநிலம், சுல்தான் பத்தேரி செல்லும் சாலையில் தற்போது பெய்யும் மழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூரிலிருந்து கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தின் சுல்தான் பத்தேரி நகரை இணைக்கும் பிரதான இணைப்பு சாலையில் நெலாக்கோட்டை அருகே உள்ள கூவச்சோலை பகுதியில் தற்போது பெய்துவரும் மழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மழை தொடா்ந்தால் சாலை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் உடனடியாக அங்கு சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் வலியுறுத்தி உள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments