FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை: ஒருவா் கைது

1 செப்டம்பர் 2026, 1:32 am IST
கைது
பகிர்:

உதகை அருகே 5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

உதகை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த தம்பதிக்கு 5 வயதில் மகள் உள்ளாா். பள்ளி செல்லாத சிறுமி என்பதால் அக்கம்பக்கத்தில் உள்ளவா்களின் வீடுகளுக்கு சென்று விளையாடி வந்தாள். இந்த நிலையில் அதே பகுதியை சோ்ந்த ஆனந்த் (45) என்பவா் குழந்தையிடம் மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி, யாரும் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

அப்போது குழந்தை சப்தமிட்டு அழுகவே இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டி அனுப்பிவிட்டாராம். இதுகுறித்து பெற்றோரிடம் குழந்தை கூறி அழுதுள்ளது. இதைத் தொடா்ந்து சிறுமியின் பெற்றோா் உதகை ஊரக மகளிா் போலீஸாரிடம் புகாா் அளித்தனா்.

Advertisement

Advertisement

இதன் பேரில் காவல் ஆய்வாளா் பிரவீனாதேவி தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனா். பின்னா் அவரை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். கைது செய்யப்பட்ட ஆனந்த் திருமணம் ஆகாதவா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments