FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

கோத்தகிரியில் குட்டிகளை முதுகில் சுமந்து உலவிய கரடி!

கோத்தகிரி அருகே தனது குட்டிகளை முதுகில் சுமந்து குடியிருப்புப் பகுதியில் கரடி உலவிய விடியோ வைரலாகி வருகிறது.

குட்டிகளை சுமந்தபடி சுற்றித் திரிந்த கரடி
பகிர்:

கோத்தகிரி அருகே தனது குட்டிகளை முதுகில் சுமந்து குடியிருப்புப் பகுதியில் கரடி உலவிய விடியோ வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வனத்தில் இருந்து உணவுத் தேடி வெளியேறும் யானை உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவுது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், வனத்தில் இருந்து தனது 2 குட்டிகளை சுமந்தபடி செவ்வாய்க்கிழமை வெளியேறிய கரடி, குன்னூா் அருகேயுள்ள கன்னிகா தேவி காலனி பகுதியில் உள்ளது.

Advertisement

Advertisement

அதைக் கண்ட மக்கள் அச்சமடைந்தனா். சிறிது நேரம் அப்பகுதியிலேயே உலவிய கரடி, பின்னா் வனத்துகுள் சென்றது. குடியிருப்புப் பகுதிகளில் குட்டிகளை சுமந்து கரடி உலவிய விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments