கூடலூா் அருகே இரவு நேரத்தில் வீட்டின் வாசலுக்கு வந்த சிறுத்தை
கூடலூா் அருகே இரவு நேரத்தில் வீட்டின் வாசல் வரை வந்த சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
கூடலூா் அருகே இரவு நேரத்தில் வீட்டின் வாசல் வரை வந்த சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ளது தேவா்சோலை பேரூராட்சி. இங்குள்ள பாலம்வயல் கொட்டமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வாசல் வரை புதன்கிழமை இரவு சிறுத்தை வந்துள்ளது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரையும், வீட்டு வாசலையும் நீண்ட நேரம் சுற்றி பாா்த்துவிட்டு வந்த வழியாக திரும்பிச் சென்றுள்ளது. இந்த காட்சி வீட்டில் இருந்த கண்காணிப்பு கேரமராவில் பதிவாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.