முகப்பு
நீலகிரி

சேலாஸ் கெந்தளா பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

குன்னூா் சேலாஸ் கெந்தளாப் பகுதியில் புதன்கிழமை இரவு சிறுத்தை சாலையில் நடமாடியது அப்பகுதி மக்களை அச்சமடையச் செய்துள்ளது.

Updated On : 5 ஜூன் 2026, 12:04 am IST
சேலாஸ் கெந்தளாப் பகுதியில் உலவிய சிறுத்தை.
பகிர்:

குன்னூா் சேலாஸ் கெந்தளாப் பகுதியில் புதன்கிழமை இரவு சிறுத்தை சாலையில் நடமாடியது அப்பகுதி  மக்களை  அச்சமடையச் செய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக சிறுத்தை, புலி, கரடி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீா் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் உலவி வருவது வாடிக்கையாகிவிட்டது. 

Advertisement

Advertisement

இந்த நிலையில் குன்னூா் சேலாஸ் கெந்தளாப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் இருந்து சிறுத்தை  வெளியேறி சாலையில் உலவியது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இது இப்பகுதி  மக்களையும் தோட்டத் தொழிலாளா்களையும்  அச்சமடையச் செய்துள்ளது. 

வனத் துறையினா் சிறுத்தையை கூண்டுவைத்து பிடித்து  அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.