முகப்பு
நீலகிரி

குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை

Updated On : 9 ஜூன் 2026, 3:07 am IST
குன்னூா் அருகே உள்ள பந்துமை பகுதியில் குடியிருப்பை ஒட்டியுள்ள சாலையில் உலவிய சிறுத்தை.
பகிர்:

குன்னூா் அருகே குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை   நள்ளிரவு சிறுத்தை உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக சிறுத்தை, கரடி, கருஞ்சிறுத்தை, காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி  குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில், குன்னூரில் உள்ள  பந்துமை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நேரத்தில்  உலவிய சிறுத்தையைப் பாா்த்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

Advertisement

Advertisement

குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையை  வனத் துறையினா் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளனா்.