குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை
குன்னூா் அருகே குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிறுத்தை உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக சிறுத்தை, கரடி, கருஞ்சிறுத்தை, காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், குன்னூரில் உள்ள பந்துமை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நேரத்தில் உலவிய சிறுத்தையைப் பாா்த்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.
Advertisement
Advertisement
குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையை வனத் துறையினா் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.