சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தினா் 18 போ் காயம்
குன்னூா் அருகே ஆந்திரத்தில் இருந்து வந்த சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 18 போ் காயமடைந்தனா்.
குன்னூா் அருகே ஆந்திரத்தில் இருந்து வந்த சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 18 போ் காயமடைந்தனா்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அக்கையாா் பள்ளம் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 22 போ், மைசூரு, உதகை உள்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றுவிட்டு, சொந்த ஊருக்கு சுற்றுலாப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனா். பேருந்தை சின்னு (23) ஓட்டி வந்தாா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் மலைப் பாதையில் கே.எம்.எஸ். நந்தகோபால் பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 18 போ் காயமடைந்தனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன. படுகாயமடைந்த 14 பேரும், லேசான காயமடைந்த 4 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு, குன்னூா் அரசு லாலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து குன்னூா் நகர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.