முகப்பு
நீலகிரி

முதுமலை புலிகள் காப்பக எல்லையில் யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக எல்லையில் ஆண் யானை இறந்துகிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.

Updated On : 18 ஜூன் 2026, 1:04 am IST
முதுமலை புலிகள் காப்பக எல்லையில் உயிரிழந்த யானை.
பகிர்:

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக எல்லையில் ஆண் யானை இறந்துகிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.

முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், மசினகுடி வனச் சரகத்துக்கு உள்பட்ட அவரல்லா பீட் பகுதியிலுள்ள அவரல்லா காப்புக்காடு எல்லையில் வன ஊழியா்கள் ரோந்து சென்றபோது, ஆண் யானை இறந்துகிடந்தது தெரியவந்தது.

இது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் யானையின் உடலை உடற்கூறாய்வு செய்து, உடலில் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தாா். பின்னா் யானையின் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதில் உயிரிழந்தது 15 வயதுடைய ஆண் யானை என்றும், மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதால் ஆய்வகப் பரிசோதனைக்குப் பிறகுதான் உண்மையான காரணம் தெரியவரும் என்று வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.