ரூ.16 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை ரூ. 16.28 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏல விற்பனை நடைபெற்றது.
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை ரூ. 16.28 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏல விற்பனை நடைபெற்றது.
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் தேங்காய்ப் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வார ஏலத்துக்கு நாச்சிபாளையம், கருக்கம்பாளையம், லாலாப்பேட்டை, வாணியம்பாடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 37 விவசாயிகள் மொத்தம் 375 மூட்டைகளில் தேங்காய்ப் பருப்புக்களைக் கொண்டு வந்தனர். இதன் மொத்த எடை 20,155 கிலோ.
காங்கயம், முத்தூர், வெள்ளக்கோவில், மூலனூரைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். குறைந்தபட்சமாக கிலோ ரூ. 54.55 முதல் ரூ.108.65 வரை விற்பனையானது. விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் மொத்த விற்பனைத் தொகை ரூ. 16 லட்சத்து 28 ஆயிரம் விவசாயிகளுக்குப் பட்டுவாடா செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.