விபத்தில் சமையல்காரர் சாவு
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த சமையல்காரர் புதன்கிழமை உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த சமையல்காரர் புதன்கிழமை உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம், கிழங்கூரைச் சேர்ந்தவர் முனியப்பன் (45). இவர் தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் சமையல்காரராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது இருசக்கர வாகனத்தில் கரூரில் இருந்து தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். வழியில் தாராபுரம், ராமமூர்த்தி நகர் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து முனியப்பன் தவறி கீழே விழுந்துள்ளார். தலையில் பலத்த அடிபட்ட நிலையில் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர் உயிரிழந்தார்.
இது குறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.