ரூ. 37 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை
காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில்
காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் 70 காங்கேயம் இன மாடுகள் மொத்தம் ரூ. 37 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டன.
பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற சந்தைக்கு மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 144 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன.
இதில் 70 மாடுகள் மொத்தம் ரூ. 37 லட்சத்துக்கு விற்கப்பட்டன. இதில் அதிகபட்ச விலையாக ரூ. 93 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலைப் பசு விற்பனை செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.