கீரனூர் கருப்பண்ண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
காங்கயம் அருகே கீரனூரில் உள்ள ஸ்ரீவிநாயக சபரிவார சகித ஆத்திமரத்தண்ணன் அம்மாபட்டி கருப்பண்ண சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
காங்கயம் அருகே கீரனூரில் உள்ள ஸ்ரீவிநாயக சபரிவார சகித ஆத்திமரத்தண்ணன் அம்மாபட்டி கருப்பண்ண சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த திங்கள்கிழமை முதல் சிறப்பு வழிபாடு, யாக பூஜைகள் நடைபெற்றன.
புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு மங்கள இசையுடன் நான்காம்கால யாக வேள்வி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, ஆலயம் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர், அதிகாலை 5.30 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை, முளைப்பாலிகை கரைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.