FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அடிப்படை வசதிகள் கோரி ஆர்ப்பாட்டம்

உடுமலை ஒன்றியம், கொடுங்கியம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்துத்தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

உடுமலை ஒன்றியம், கொடுங்கியம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்துத்தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ் தலைமை வகித்தார்.
ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக திறந்து கிடக்கும் ஊராட்சி பொதுக் கிணறுகளுக்கு கம்பி வலை அமைக்க வேண்டும். பாழடைந்து கிடக்கும் மகளிர் பொதுக் கழிப்பிடங்களை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். 
கொடுங்கியம் ஊராட்சியில் சாலைகள் மற்றும் சுடுகாட்டை சீரமைத்துக் கொடுக்க வேண்டும். கொடுங்கியத்தில் பொது நூலகமும், கே.வல்லக்குண்டாபுரத்தில் பொதுக் கழிப்பிடமும் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments