பின்னலாடை கிடங்கில் தீ
திருப்பூரில் பின்னலாடை கழிவுத் துணி கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதமானது.
திருப்பூரில் பின்னலாடை கழிவுத் துணி கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதமானது.
திருப்பூர், செல்லம் நகர், பகவதி அம்மன் கோயில் அருகே சுரேஷ் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பின்னலாடை துணி கிடங்கு நடத்தி வருகிறார். இந்நிலையில் இக்கிடங்கில் புதன்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர். இருப்பினும் பல லட்சம் மதிப்பிலான பின்னலாடை கழிவுத் துணிகள் எரிந்து சேதமாகின. இதுகுறித்து திருப்பூர் வீரபாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.