பிளஸ் 1 பொதுத் தேர்வு: திருமுருகன் மெட்ரிக் பள்ளி 100 % தேர்ச்சி
திருப்பூர், பூலுவப்பட்டி நெருப்பெரிச்சல் ஜி.என்.கார்டன் பகுதியில் உள்ள திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 1 பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருப்பூர், பூலுவப்பட்டி நெருப்பெரிச்சல் ஜி.என்.கார்டன் பகுதியில் உள்ள திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 1 பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப்பள்ளி மாணவ மாணவிகள் 3 பேர் 600- க்கு 573, 563, 555 மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளனர். கணக்குப்பதிவியலில் 4 பேர் 100- க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். வணிகவியலில் 4 பேரும், கணக்குப்பதிவியலில் 4 பேரும் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 550-க்கு மேல் 4 பேரும், 500-க்கு மேல் 25 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 486 ஒருவரும், 485 ஒருவரும், 483 ஒருவரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
அறிவியலில் ஒருவர், சமூக அறிவியலில் 2 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 480-க்கு மேல் 6 பேரும், 470-க்கு மேல் 3 பேரும், 460- க்கு மேல் 14 பேரும், 450- க்கு மேல் 12 பேரும், 400-க்கு மேல் 76 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்விலும் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. முறையே 3 பேர் 1163, 1150, 1136 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதத்தில் ஒருவரும், வணிகவியலில் ஒருவரும், கணக்கு பதிவியலில் 4 பேரும் 200- க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். 1000-க்கு மேல் 21 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் நிறுவனர் மோகன், தாளாளர் சுதா மோகன், ஆசிரிய , ஆசிரியைகள் பாராட்டுத் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.