FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

ஜமாபந்தி: பொதுமக்கள் கோரிக்கை மனு

காங்கயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பொது மக்களிடம் இருந்து 129 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

Updated On : 25 மே 2018, 12:42 am IST
பகிர்:

காங்கயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பொது மக்களிடம் இருந்து 129 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
காங்கயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் வியாழக்கிழமை நத்தக்காடையூர் உள்வட்டதைச் சேர்ந்த மறவபாளையம், கீரனூர், பாப்பினி, நால்ரோடு, பரஞ்சேர்வழி, மருதுறை, நத்தக்காடையூர், முள்ளிப்புரம், குட்டப்பாளையம், பழையகோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
தாராபுரம் உதவி ஆட்சியர் கிரேஸ் பச்சாவு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று, மனுதாரர்களுக்கு பதில் தெரிவித்தார். இதில், பொது மக்களிடம் இருந்து முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட 129 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments