டிராக்டரில் சிக்கி விவசாயி சாவு
தாராபுரம் அருகே டிராக்டரில் சிக்கி விவசாயி புதன்கிழமை உயிரிழந்தார்.
தாராபுரம் அருகே டிராக்டரில் சிக்கி விவசாயி புதன்கிழமை உயிரிழந்தார்.
தாராபுரம் அருகே உள்ள எஸ்.காங்கேயம்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிவராஜ் (55). இவர் புதன்கிழமை காலை விவசாயப் பணிகளை முடித்தபின், அருகிலுள்ள வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக சிவராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயமுற்ற அவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இது குறித்து அலங்கியம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.