வெள்ளக்கோவிலில் 2 டன் முருங்கைக்காய் வரத்து
வெள்ளக்கோவில், ஜூலை 14: வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்துக்கு 2 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது.
வெள்ளக்கோவிலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் தனியாா் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஒன்றரை டன் வரத்து இருந்தது. இந்த வாரம் 2 டன் வரத்து இருந்தது. ஆனால் மர முருங்கை, கரும்பு முருங்கைக்காய் வரத்து இல்லை.
செடி முருங்கை கிலோ ரூ. 80-க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.