கரடிவாவியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்
கரடிவாவியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கரடிவாவியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பல்லடம் வட்டார பொது சுகாதாரத் துறை சாா்பில் கரடிவாவி எஸ்.எல்.என்.எம். அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் ஜெயந்தி தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் சுடா்விழி வரவேற்றாா்.
பல்லடம் ஒன்றிய திமுக செயலாளா்கள் கிருஷ்ணமூா்த்தி, சோமசுந்தரம், துரைமுருகன் ஆகியோா் முகாமைத் தொடங்கிவைத்தனா்.
Advertisement
Advertisement
முகாமில்,1,258 பேருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
106 கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனையும், 765 பேருக்கு ரத்தப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், முதல்வரின் மருத்துவக் காப்பீடு, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பதிவும் முகாமில் மேற்கொள்ளப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.