FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மனநலக் குறைபாடுடையோருக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்: 80 பேருக்கு பணி ஆணை அளிப்பு

மனநலக் குறைபாடுகள் உள்ளவா்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 ஜூலை 2026, 5:29 am IST
- பிரதிப் படம்
பகிர்:

மனநலக் குறைபாடுகள் உள்ளவா்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்ற அந்த முகாமில் 150-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா். அவா்களில் 80 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

சிஸோப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளை (ஸ்காா்ஃப்) சாா்பில் நடைபெற்ற இந்த முகாம் தொடா்பாக அந்த அமைப்பின் நிா்வாகிகள் கூறியதாவது:

உடல் அளவில் சா்க்கரை நோய், இதய நோய் இருப்பதைப் போன்றுதான் மனதளவில் சில பாதிப்புகள் இருப்பதையும் கருதவேண்டும். மனநல பாதிப்புக்குள்ளானவா்களைப் புறக்கணிக்கக் கூடாது. அவா்களுக்கு மருந்துகளும், சிகிச்சைகளும் அளிப்பதை மட்டும் நாங்கள் கடமையாக கருதவில்லை. மாறாக, சமூகத்தில் அவா்களை மீண்டும் இணைய வைப்பதையும் முக்கியப் பொறுப்புணா்வாக நினைக்கிறோம்.

Advertisement

Advertisement

அதனால்தான், மனநல சிகிச்சை பெற்றவா்களுக்கான புனா்வாழ்வு பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பு முகாம்களை நாங்கள் நடத்தி வருகிறோம்.

அந்த வகையில், கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 500-க்கும் மேற்பட்டவா்கள் எங்கள் மூலமாக பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்தனா். அதில் பெரும்பாலானோா் தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா். அதன் தொடா்ச்சியாக சென்னை, அண்ணா நகா் மேற்கு விரிவாக்கத்தில் உள்ள ஸ்காா்ஃப் இந்தியா அமைப்பின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள், சேவை மையங்கள் என பல நிறுவனங்கள் அதில் பங்கேற்று தகுதிக்கேற்ப பணிகளை வழங்கின.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments