FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பேருந்து பயணிகளிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 5 போ் கைது

Updated On : 27 டிசம்பர் 2025, 4:45 am IST
பகிர்:

பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடம் கைப்பேசிகளைத் திருடி வந்த 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி, பெருமாநல்லூா் ஆகிய பேருந்து நிலையங்களில் பயணிகளிடம் கைப்பேசி திருடுவது அதிகரித்து வந்தது.

இந்நிலையில், பழங்கரை அருகே அவிநாசி போலீஸாா் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஆந்திர மாநில பதிவு கொண்ட 2 காா்களில் இருந்தவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த நக்கா ஹரீஷ் (44), குருமிலி ராஜு (31), பாஷா (25), குமரிகுண்டா பிரகாஷ் (32), ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சிறுவன் என்பதும்,

இவா்கள் அவிநாசி புதிய பேருந்து நிலையம், கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் கைப்பேசிகளைத் திருடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த இரண்டு காா்கள், 79 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments