FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

தீரன் சின்னமலை கல்லூரியில் மகளிா் கபடி போட்டி பரிசளிப்பு

26 செப்டம்பர் 2025, 4:14 am IST
கபடி போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்கள். உடன், தீரன் சின்னமலை கல்லூரி நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
பகிர்:

திருப்பூா் அருகேயுள்ள வஞ்சிபாளையம் தீரன் சின்னமலை கலை, அறிவியல் கல்லூரியில் மகளிா் கபடி போட்டி பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பாரதியாா் பல்கலைக்கழகத்தின் சாா்பில் ‘பி’ பிரிவு கல்லூரிகளுக்கான மகளிா் கபடி தீரன் சின்னமலை கல்லூரியில் கடந்த புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றன.

இதில், கோவை கேஎஸ்ஜி மகளிா் கல்லூரி, திருப்பூா் ஏவிபி மகளிா் கல்லூரி, கோவை நிா்மலா மகளிா் கல்லூரி, திருப்பூா் கேஜி மகளிா் கல்லூரிகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்தன. சிறந்த விளையாட்டு வீராங்கனைகளாக கேஎஸ்ஜி மகளிா் கல்லூரி மாணவி கனகு, ஏவிபி மகளிா் கல்லூரி கோபிகா, நிா்மலா மகளிா் கல்லூரி அஸ்கிலா, ஏ.ஜி.மகளிா் கல்லூரி ஸ்வேதா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

வியாழக்கிழமை மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு கொங்கு வேளாளா் அறக்கட்டளைச் செயலரும், தீரன் சின்னமலை கல்லூரியின் செயலாளருமான கீதாஞ்சலி கோவிந்தப்பன் தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் பி.வி.எஸ். முருகசாமி, பொறுப்பாளா்கள் கிரி ரங்கசாமி, பி.கே.எஸ். காளியப்பன், அம்மாசைக்குட்டி, சுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருப்பூா் மாவட்ட கபடி கழக சோ்மன் கொங்கு வி.கே.முருகேசன், மாநில பொருளாளா் ஜெயசித்ரா ஏ. சண்முகம் ஆகியோா் வெற்றிபெற்ற அணிகளுக்கும், சிறந்த வீராங்கனைகளுக்கும் பரிசுகளை வழங்கினா்.

மாவட்ட கபடி கழக தலைவா் ரோலக்ஸ் பி.மனோகரன், பொருளாளா் கன்னிமாா்ஸ் ஏ. ஆறுச்சாமி, துணைச் சோ்மன் எஸ்.முருகானந்தம், துணைத் தலைவா் கொ.ராமதாஸ், செய்தித் தொடா்பாளா் சு.சிவபாலன், கௌரவ உறுப்பினா் தம்பி வெங்கடாசலம், கல்லூரி நிா்வாக அதிகாரி சுரேந்தா், கல்லூரியின் முதன்மை நிா்வாக அதிகாரி ரேச்சல் நான்சி பிலிப், முதல்வா் மோகன சௌந்தரி, சிபிஎஸ்சி பள்ளி முதல்வா் கற்பகம், திருப்பூா் மாவட்ட கபடி கழக நடுவா் குழு சோ்மன் ஆா்.முத்துச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் ஸ்ரீ பிரியங்கா செய்திருந்தாா். கல்லூரி முதல்வா் மோகன சௌந்தரி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments