FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்

Updated On : 26 செப்டம்பர் 2025, 4:14 am IST
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 26) நடைபெற உள்ளது.

முகாம் நடைபெறும் இடங்கள்: அவிநாசி ஊராட்சி ஒன்றியம், கானூா், நம்பியம்பாளையம், ராமநாதபுரம் ஊராட்சிகளுக்கு கருவலூா் ரத்னமூா்த்தி மஹாலிலும், பொங்கலூா் ஊராட்சி ஒன்றியம், தொங்குட்டிபாளையம் ஊராட்சிக்கு அலகுமலை ஸ்ரீவேலன் மஹாலிலும், பல்லடம் ஊராட்சி ஒன்றியம், பூமலூா் ஊராட்சிக்கு பூமலூா் அம்மன் கலையரங்கத்திலும் முகாம் நடைபெற உள்ளது.

காங்கயம் நகராட்சி, வாா்டு எண் 1, 2, 5 ஆகிய பகுதிகளுக்கு திருப்பூா் சாலை வெங்கடேஸ்வரா மஹாலிலும், அவிநாசி நகராட்சி வாா்டு எண் 3, 5 ஆகிய பகுதிகளுக்கு குலாளா் திருமண மண்டபத்திலும், திருப்பூா் மாநகராட்சி 2-ஆம் மண்டலத்துக்குள்பட்ட வாா்டு எண் 16,17,19 ஆகிய பகுதிகளுக்கு பின்.என்.சாலை புதிய பேருந்து நிலைய வளாகத்திலும் முகாம் நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

இந்த முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments