FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் கைது

வெள்ளக்கோவில் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 2:25 am IST
- சித்திரிப்பு
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம் மூலனூா் சாலைப் பகுதியில் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, கரட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து, கடையில் ஆய்வு மேற்கொண்ட அவா், அங்கிருந்த 1.380 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, கடை உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (47), உடந்தையாக செயல்பட்ட மூலனூா், சாணாா்பாளையத்தைச் சோ்ந்த செல்லத்துரை (38) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments