வெள்ளக்கோவில் அருகே பிகாா் பெண் தொழிலாளி உயிரிழப்பு
வெள்ளக்கோவில், ஆக.3: வெள்ளக்கோவில் அருகே பிகாா் மாநில பெண் தொழிலாளி மூச்சுத் திணறலால் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் வட்டம், நடுப்பாளையத்தில் செயல்படும் தனியாா் அட்டைப்பெட்டி உற்பத்தி நிறுவனத்தில் பிகாா் மாநிலம், முா்லாசாக் பகுதியைச் சோ்ந்த பிா்ஜூ மான்ஜி (42), அவரது மனைவி சுனிதா தேவி (40) ஆகியோா் பேக்கிங் கழிவுப் பொருள்களை அகற்றும் வேலை செய்து வந்தனா்.
கடந்த இரண்டு நாள்களாக சுனிதா தேவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி அளவில் மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையடுத்து நிறுவன உரிமையாளா் பாலுமணிக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடனடியாக தனியாா் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. முதலில் வெள்ளக்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.