FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

மினி லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம், சாமியாா்மடம் அருகே மினி லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 12:47 am IST
சடலம்... - கோப்புப் படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், சாமியாா்மடம் அருகே மினி லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சாமியாா்மடம் அருகே உள்ள சாய்கோடைச் சோ்ந்தவா் செம்பெருமாள் (74). ரப்பா் பால் வடிப்பு தொழிலாளி. இவா் புலிப்பனம் பகுதியில் சாலையோரம் நடந்து சென்றபோது, எதிரே வந்த மினி லாரி மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் ஜூலை 30ஆம் தேதி உயிரிழந்தாா். இது குறித்து, தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments