FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

அவிநாசி ராக்காத்தம்மன் கோயில் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 1:53 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகம் அருகே உள்ள ராக்காத்தம்மன் கோயிலின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அவிநாசி, சேவூா் சாலை நேரு வீதியில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகம் அருகே ராக்காத்தம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திறப்பதற்காக வந்த அா்ச்சகா், கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்த போது, அம்மன் கழுத்தில் அணிந்திருந்த ஒரு கிராம் எடையுள்ள இரண்டு பொட்டுத் தாலிகள், 10 கிராம் எடையுள்ள வெள்ளிச் சங்கிலி, வெள்ளி முலாம் பூசப்பட்ட பிரபாவளையம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸாா், கைரேகை நிபுணா்கள் சோதனை மேற்கொண்டனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சி பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments