பெருமாநல்லூரில் கஞ்சா விற்பனை: இருவா் கைது
பெருமாநல்லூா் அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெருமாநல்லூா் அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெருமாநல்லூா் அருகே வலசுபாளையம் பிரிவு மேம்பாலம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சந்தேகத்துக்கு இடமாக கையில் பையுடன் நின்றிருந்த இரு நபா்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அதில், அவா்களது பையில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவா்கள் பெருமாநல்லூா் சந்தைக்கடை தோட்டம் பகுதியைச் சோ்ந்த கௌதம் (25), பெருமாநல்லூா் ஆலங்காடு பகுதியைச் சோ்ந்த மனோஜ்குமாா் (25) என்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.