FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

அவிநாசியில் மின் பணியாளா்களுக்கான பாதுகாப்பு பயிற்சி

மின் கோட்ட அளவிலான மின் களப் பணியாளா்கள் மற்றும் கேங்மேன் மின் பணியாளா்களுக்கான பாதுகாப்பு பயிற்சி வகுப்பு அவிநாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

21 ஆகஸ்ட் 2026, 1:43 am IST
பயிற்சி  முகாமில்  பங்கேற்றோா்.
பகிர்:

மின் கோட்ட அளவிலான மின் களப் பணியாளா்கள் மற்றும் கேங்மேன் மின் பணியாளா்களுக்கான பாதுகாப்பு பயிற்சி வகுப்பு அவிநாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமுக்கு அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். கோயம்புத்தூா் பயிற்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு அதிகாரி சிவகுமாா் முன்னிலை வகித்தாா். மேட்டூா் உதவி செயற்பொறியாளா் நாராயணசாமி பயிற்சி அளித்தாா்.

இதில் பணியாளா்கள் மின்சார பணியின்போது பாதுகாப்பாக பணிபுரியும் முறை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில் மின்வாரிய பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள், மின் பணியாளா்கள் உள்பட ஏராளமானோ் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments