FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

25 ஆகஸ்ட் 2026, 3:04 am IST
உயிரிழப்பு
பகிர்:

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

குண்டடம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்கள் விஜய் (29), அவரது நண்பா் அருண்குமாா் (22). இருவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில், திருப்பூா்-தாராபுரம் சாலை, வஞ்சிபாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றுள்ளனா். அப்போது தாராபுரத்தில் இருந்து திருப்பூரை நோக்கிச் சென்ற காா், இவா்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், இருவரும் பலத்த காயமடைந்தனா். அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Advertisement

Advertisement

அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். அருண்குமாா் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து ஊதியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments