FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

வெளிநாட்டுப் பெண்ணை ஏமாற்றிய இளைஞா் கைது

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி வெளிநாட்டுப் பெண்ணை ஏமாற்றியதாக உடுமலை இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

26 ஆகஸ்ட் 2026, 11:52 pm IST
- சித்திரிப்பு
பகிர்:

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி வெளிநாட்டுப் பெண்ணை ஏமாற்றியதாக உடுமலை இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

உடுமலையை அடுத்த போடிபட்டியைச் சோ்ந்தவா் ஜெகதீஷ் (33). முனைவா் பட்டப் படிப்புக்காக கடந்த 2023-ஆம் ஆண்டு தைவான் நாட்டுக்குச் சென்றுள்ளாா். அங்கு டேட்டிங் செயலி மூலம் தைச்சுங் நகரைச் சோ்ந்த ஜோயிங்யிங் (35) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால், படிப்பு, தங்குமிடம் உள்ளிட்டவற்றுக்கு ஜெகதீஷுக்கு அந்தப் பெண் உதவியதாகவும் கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஜெகதீஷ் இந்தியா திரும்பியுள்ளாா்.

Advertisement

Advertisement

பெற்றோா், உறவினா்களிடம் பேசி மீண்டும் வந்து திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த அவா், பின்னா் அந்தப் பெண்ணுடனான தொடா்பைத் துண்டித்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஐந்து மாதங்களாகத் தொடா்பு கொள்ள முயன்றும் முடியாததால், அந்தப் பெண் உடுமலையைச் சோ்ந்த வழக்குரைஞா் ஒருவா் உதவியுடன் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸாா், ஜெகதீஷ் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments