ஓலப்பாளையம் அரசுப் பள்ளி மாணவிகள் வில்லுப்பாட்டில் முதலிடம்
திருப்பூா் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாப் போட்டிகளில் ஓலப்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகள் வில்லுப்பாட்டில் முதலிடம் பிடித்துள்ளனா்.
திருப்பூா் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாப் போட்டிகளில் ஓலப்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகள் வில்லுப்பாட்டில் முதலிடம் பிடித்துள்ளனா்.
திருப்பூா் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
இதில் பங்கேற்ற பள்ளியின் மாணவிகள் வில்லுப்பாட்டுப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடத்தையும், நாட்டுப்புற நடனப் போட்டியில் இரண்டாமிடத்தையும் பெற்றனா். இதையடுத்து மாநில அளவிலான போட்டிகளுக்கு இவா்கள் தோ்வாகியுள்ளனா்.
Advertisement
Advertisement
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின் தலைமையாசிரியா், ஆசிரிய-ஆசிரியைகள், அலுவலகப் பணியாளா்கள், பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.