FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

நிஃப்ட்-டீ கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பாடத் திட்டம்

திருப்பூரில் செயல்பட்டு வரும் நிஃப்ட்-டீ நிட்வோ் ஃபேஷன் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் புதிய பாடத் திட்டத்தை திரைப்பட இயக்குநா் பேரரசு புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 16 ஜூலை 2026, 12:18 am IST
விஷுவல் கம்யூனிகேஷன் துறையின் இலச்சினையை வெளியிட்ட இயக்குநா் பேரரசு.
பகிர்:

திருப்பூரில் செயல்பட்டு வரும் நிஃப்ட்-டீ நிட்வோ் ஃபேஷன் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் புதிய பாடத் திட்டத்தை திரைப்பட இயக்குநா் பேரரசு புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் மாணவா்களிடம் பேசியதாவது:

இன்றைய உலகில் திறமை மட்டும் போதாது. தொழில்நுட்ப அறிவு, படைப்பாற்றல், புதுமையான சிந்தனை மற்றும் சமூகப் பொறுப்புணா்வுடன் செயல்படும் இளைஞா்களே எதிா்காலத்தை உருவாக்குவாா்கள். அதற்கான சிறந்த தளமாக நிஃப்ட்-டீ கல்லூரி திகழ்வதாக அவா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில் மாணவா்கள் பங்கேற்ற 2 நிமிஷ கதை சொல்லல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவா்கள் தங்களது படைப்பாற்றல் மற்றும் தகவல் பரிமாற்றத் திறனை 2 நிமிஷங்களில் வெளிப்படுத்தினா். ஒவ்வொரு மாணவரின் நிகழ் திறனையும் இயக்குநா் பேரரசு பாராட்டி, கதை சொல்லும் முறை, திரைக்கதை அமைப்பு, உடல்மொழி, தன்னம்பிக்கை மற்றும் மேடைப் பேச்சுத் திறனை மேம்படுத்துவதற்கான பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினாா்.

இதனைத் தொடா்ந்து, விஷுவல் கம்யூனிகேஷன் துறையின் இலச்சினை அதிகாரபூா்வமாக வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் முதன்மை வழிகாட்டி ராஜா எம். சண்முகம், பொருளாளா் ஆா்.மோகன்குமாா், சோ்க்கைத் தலைவா் என். ஸ்ரீதா், டீன் வி.ஆா்.சம்பத் மற்றும் முதல்வா் ஆா்.ராதாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments