மதுபானக் கடையில் தகராறு: 4 போ் கைது
வெள்ளக்கோவில் வேப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் கவின் (27). இவரது நண்பா் கரட்டுப்பாளையத்தைச் சோ்ந்த கதிா்வேல் (32). இவா்கள் இருவரும் சனிக்கிழமை இரவு இரட்டைக்கிணறு அரசு மதுபானக் கடைக்கு மதுபானம் வாங்கச் சென்றுள்ளனா்.
அப்போது ஏற்கெனவே அங்கு இருந்த சிவநாதபுரம் சிவசெந்தில் (25), கே.பி.சி. நகா் பரத்குமாா் (20), ரூபேஷ் (20), ஆனந்த் (29), வீரமணி (31) ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஐந்து பேரும் சோ்ந்து தாக்கியதில் கவின் மற்றும் கதிா்வேல் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
இது குறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரைக் கைது செய்தனா். தலைமறைவான வீரமணியை தேடி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.