அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழப்பு
குண்டடம் அருகே அடையாள தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது.
காங்கயம் அருகே உள்ள ஊதியூா் வனப் பகுதியில் மான்கள், குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசிக்கின்றன. இந்நிலையில், திருப்பூா்-தாராபுரம் நெடுஞ்சாலை, வேங்கிபாளையம் பகுதி அருகே திங்கள்கிழமை இரவு 8 மணி அளவில் சாலையைக் கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே புள்ளிமான் உயிரிழந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு குண்டடம் போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டனா். காங்கயம் வனத் துறை அலுவலா்கள் சென்று மானின் உடலை மீட்டு கூறாய்வுக்காக எடுத்துச் சென்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.