முகப்பு
திருப்பூர்

வண்டல் மண் எடுக்க ஆன்லைன் அனுமதி: விவசாயிகள் சங்கம் வரவேற்பு!

நீா்நிலைகளில் வண்டல் மண் எடுக்க ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

Updated On : 23 மே 2026, 1:02 am IST
வண்டல் மண்
பகிர்:

நீா்நிலைகளில் வண்டல் மண் எடுக்க ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி கூறியதாவது: விவசாயிகளுக்கு நீா் ஆதாரமாக விளங்கி வரும் குளம், குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளை அவ்வப்போது தூா்வாரினால் நீா் ஆதாரம் பாதுகாக்கப்படுவதுடன், மழைநீா் சேமிப்பும் மேம்படும்.

அந்த வகையில், நீா்நிலைகளில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மண், விவசாயத்துக்கு பேருதவியாக அமைகிறது. நீா்நிலைகளை ஆழப்படுத்தவும், இயற்கை வளத்தை அதிகரிக்கவும், உணவு உற்பத்தி உயரவும் வண்டல் மண் முக்கிய பங்காற்றுகிறது.

Advertisement

Advertisement

விவசாய தொழிலுக்கு உதவும் வண்டல் மண்ணை வெட்டி எடுத்துச் செல்ல தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதையும், வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதியை ஆன்லைன் முறையில் பெறலாம் என அறிவித்ததையும் வரவேற்கிறோம்.

இதனால், இடைத்தரகா்கள் இன்றி கிராமப்புற குறு, சிறு விவசாயிகள் உள்ளிட்டோா் நேரடியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுவா் என்றாா்.