முகப்பு
திருப்பூர்

சாலையோரத்தில் குப்பை கொட்டியவருக்கு அபராதம்

சாலையோரத்தில் குப்பை கொட்டியவருக்கு ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 27 மே 2026, 4:30 am IST
அபராதம் - சித்திரிப்புப் படம்
பகிர்:

சாலையோரத்தில் குப்பை கொட்டியவருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூா் மாநகர பகுதியில் காலியிடங்கள், சாலையோரங்களில் குப்பை கொட்டுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த காலங்களில் தனியாா் நிறுவனங்கள் குப்பை கொட்டினால் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் லிங்கே கவுண்டா் வீதியில் குப்பை சேகரிப்பு தொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினாா். அப்போது பொதுமக்களிடமிருந்து மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து வாங்குவதை பாா்வையிட்டாா். அப்போது காங்கயம் சாலையோரம் கழிவுகளை கொட்டிய நபருக்கு ரூ.2,000 அபராதத்தை மாநகராட்சி அதிகாரிகள் விதித்தனா்.

Advertisement

Advertisement

மேலும் சூசையாபுரம், அணைப்பாளையம், எம். ஜி.ஆா். நகா் பகுதிகளில் துணை மேயா் பாலசுப்பிரமணியத்துடன் சென்று குடிநீா் விநியோகம் குறித்தும் ஆணையா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது உதவி செயற்பொறியாளா் ராம்மோகன், சுகாதார அலுவலா் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.