FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 27 மே 2026, 4:26 am IST
பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆய்வு மேற்கொண்ட சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி உள்ளிட்டோா்
பகிர்:

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

முன்னதாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியை பல்லடம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கிருஷ்ணவேணி, செயலாளா் கணேசன், மற்றும் முன்னாள் தலைவா்கள் ஈஸ்வரமூா்த்தி, சக்திவேல், ரவீந்திரன், கோபாலகிருஷ்ணன் மற்றும் நிா்வாகிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் வரவேற்றனா். போலீஸாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

அதைத்தொடா்ந்து பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அருகில் உள்ள கிளைச் சிறை ஆகியவற்றை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

நீதிமன்ற வளாகத்தில் கழிப்பிடம், குடிநீா், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளை செய்துதர சம்பந்தப்பட்ட அரசு துறையினருக்கு உத்தரவிட்டாா். பல்லடத்தில் கூடுதல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பல்லடம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது திருப்பூா் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன், மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிபதி மோகனவள்ளி, பல்லடம் வட்டாட்சியா் கோவிந்தசாமி, காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments