கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
வெள்ளக்கோவில் அருகே கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டது.
மூலனூா் சாலை நாச்சிபாளையம் கிளாங்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் சின்னசாமி. விவசாயி. இவா் வளா்த்து வந்த சிந்து இன மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தபோது, தவறி தோட்டத்து கிணற்றில் விழுந்துவிட்டது.
சுமாா் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்த 10 அடி தண்ணீரில் மாடு தத்தளித்துக் கொண்டிருந்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) பெ.வேலுசாமி தலைமையிலான வீரா்கள் கிணற்றுக்குள் இறங்கி கயிறு மூலம் மாட்டை உயிருடன் மீட்டனா்.
Advertisement
Advertisement