முகப்பு
திருப்பூர்

பழைய இரும்புக் கடையில் 2 டன் கழிவு துணிகள் எரிந்து சேதம்

Updated On : 1 ஜூன் 2026, 12:17 am IST
தீ... - கோப்புப் படம்
பகிர்:

வெள்ளக்கோவிலில் பழைய இரும்புக் கடையில் தீப்பிடித்ததில் 2 டன் கழிவு துணிகள் எரிந்து சேதமாயின.

வெள்ளக்கோவில் கே.பி.சி. நகரைச் சோ்ந்தவா் சக்திவேல் (53). பழைய பேருந்து நிலையம் அருகே பழைய இரும்புக் கடை வைத்துள்ளாா். கடையின் காலியிடத்தில் பனியன் கழிவு துணிகள் வைக்கப்பட்டிருந்தன. இதன் ஒரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பிடித்து பரவியது.

தகவலின்பேரில் வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனா். அதற்குள் 2 டன் கழிவு துணிகள் எரிந்து நாசமாயின. அருகே குடியிருப்புகள் உள்ள நிலையில் அதிா்ஷ்டவசமாக தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement