FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஆா்ப்பாட்டம்

Updated On : 26 செப்டம்பர் 2025, 4:51 am IST
பகிர்:

ஊரக வளா்ச்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மு.முகமது இலியாஸ் தலைமை வகித்தாா். மாநில தலைவா் ச.இளங்குமரன் மாவட்டச் செயலாளா் வெ.தருமன் பொருளாளா் கே.வினோத்குமாா், மாநில செயற்குழு உறுப்பினா் பி.பிரின்ஸ், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.தெய்வானை உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள 1,500-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளா்களுக்கு சிறப்பு நிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஊராட்சிகளுக்கு கூடுதல் பொறுப்புப் படியை உயா்த்தி வழங்க வேண்டும். தொடா்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி செயலா்களாக பணிபுரிந்து பதவிஉயா்வு பெற்று புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வுபெற்ற பணியாளா்களுக்கு ஊராட்சி செயலா் பதவிக்கான சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments