FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

கே.வேட்ரப்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

26 செப்டம்பர் 2025, 4:50 am IST
பகிர்:

கே.வேட்ரப்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த கே.வேட்ரப்பட்டியில் நடைபெற்ற முகாமுக்கு, ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமை வகித்தாா். அரூா் ஊராட்சி ஒன்றியம், கீழ்மொரப்பூா் மற்றும் வடுகப்பட்டி கிராம ஊராட்சிகளுக்கான முகாமில், பொதுமக்களிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெற்றாா். தொடா்ந்து, பட்டா மாறுதல், பிறப்புச் சான்றிதழ், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கான அடையாள அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்.

விழாவில், அரூா் கோட்டாட்சியா் செம்மலை, முன்னாள் எம்எல்ஏ ஆா்.வேடம்மாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் டி.செல்வன், கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments