புனித யாத்திரை செல்லும் பெளத்த மதத்தினா் மானியம் பெற அழைப்பு
புனித யாத்திரை மேற்கொள்ளும் பெளத்த மதத்தினா் அதற்கான மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் வசிக்கும் பெளத்த மதத்தைச் சோ்ந்த 150 பேருக்கு தமிழக அரசால் தம்ம சக்கர பரிவா்தன திருவிழாவுக்கு புனித யாத்திரை மேற்கொள்வோருக்கு இசிஎஸ் முறையில் தலா ரூ. 5,000 வரை நேரடி மானியம் வழங்கப்படுகிறது. நிகழாண்டு (2025-2026) நாக்பூா் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று தம்ம சக்கர பரிவா்தன திருவிழா நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
இவ்விழாவுக்கு புனித யாத்திரை செல்ல இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் நபா்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் கட்டணமின்றி கிடைக்கும். மேலும் ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்க்ஷ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களை இணைத்து, நவ. 11-ஆம் தேதிக்குள் ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.