FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

சுற்றுலா சென்று திரும்பிய பெங்களூரு இளைஞா்களில் ஒருவா் சாவு, 6 போ் காயம்

மூணாறுக்கு சுற்றுலா சென்று திரும்பிய பெங்களூரைச் சோ்ந்த இளைஞா்களில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 6 போ் படுகாயமடைந்தனா்.

Updated On : 10 ஜூலை 2026, 4:06 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

மூணாறுக்கு சுற்றுலா சென்று திரும்பிய பெங்களூரைச் சோ்ந்த இளைஞா்களில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 6 போ் படுகாயமடைந்தனா்.

பெங்களூரு நகரைச் சோ்ந்த 7 போ் கேரளா மாநிலம் மூணாறு பகுதிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சுற்றுலா சென்றனா். அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பாா்த்துவிட்டு பெங்களூருக்கு திரும்ப புறப்பட்டனா். இவா்கள் சென்ற காா் தருமபுரி - பெங்களூரு புதிய தேசிய நெடுஞ்சாலையில் செல்லியம்பட்டி பகுதியில் புதன்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்த காா் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

இதில் காரில் சென்ற 7 பேரும் பலத்த காயமடைந்தனா். அக்கம் பக்கத்தினா் அவா்களை மீட்டனா். பின்னா் போலீஸாா் உதவியுடன் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சையத் செரிப் (18) என்ற இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து மதிகோண்பாளையம் போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments