FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

Updated On : 21 ஜூலை 2026, 2:06 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பாப்பாரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக பாப்பாரப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளா் மாரி தலைமையிலான காவலா்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கூக்குட்டமருதஅள்ளி பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பனைகுளம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments